Type Here to Get Search Results !

நாளை விண்ணில் பாய்கிறது ''பி.எஸ்.எல்.வி., - சி48'' ராக்கெட்


இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, பி.எஸ்.எல்.வி., - சி48 என்ற ராக்கெட்டை, நாளை விண்ணில் செலுத்துகிறது.நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது, இஸ்ரோ. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், ரிசாட் - 2 பி.ஆர்.,1 என்ற, அதிநவீன செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.இந்த செயற்கை கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி48ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.ரிசாட் -2 பி.ஆர்., 1 செயற்கை கோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின், தலா, ஒரு செயற்கைகோளும்; அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.நாளை விண்ணில் பாய உள்ள, பி.எஸ்.எல்.வி., - சி 48 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்; ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 75வது ராக்கெட் என்ற சிறப்பை பெறுகிறது.


Top Post Ad

Below Post Ad