Type Here to Get Search Results !

புத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏ.சி.க்களில் மாற்றம்



 புத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏர்கண்டிஷனர்களில் இயல்பான வெப்ப நிலையாக 24 டிகிரி செல்ஷியஸ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது 18 முதல் 21 டிகிரி செல்ஷியஸ் டிகிரி வரை இயல்பு வெப்பநிலையாக உள்ளது. இதை 24 ஆக உயர்த்தும் போது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் கணித்துள்ளது.
24 டிகிரியில் வைத்து ஏ.சி.யை பயன்படுத்தினால் 4 ஆயிரம் ரூபாய் வரையும், அதை 27 டிகிரியாக அதிகரித்தால் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் வருடாந்திர மின்கட்டணத்தில் சேமிக்க முடியும்.
25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை என்பது மனித உடலுக்கு பாதுகாப்பானது என்று கூறியுள்ள எரிசக்தி அமைச்சகம், ஜப்பானில் ஏ.சி.க்களின் இயல்பு வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.


Top Post Ad

Below Post Ad